உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோ பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் யாதவ் (35). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராகவும், மாலை நேரத்தில் மாணவர்களுக்கு டியூஷனும் எடுத்துவந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இவர் ஜூம் (Zoom) செயலி மூலம் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென அவர் வீட்டுக்குள் நுழைந்த இருவர், அவரைத் தாக்கி, கழுத்தை நெரித்துக் கொலைசெய்திருக்கின்றனர். பின்னர், அவரது வீட்டிலிருந்து ரூ.2,300 திருடிச் சென்றிருக்கிறார்கள்.