அமெரிக்காவின் நியூஜெர்சியைச் சேர்ந்த 64 வயது மூதாட்டி ஒருவர், இந்தியாவைச் சுற்றிப்பார்க்க வந்தார். பல மாநிலங்களைச் சுற்றிப்பார்த்த அவர், புதுச்சேரியில் 3 நாள்கள் தங்கி சுற்றிப்பார்த்தார். அப்போது புஸ்சி வீதியிலுள்ள ஒரு கலைப்பொருள்கள் விற்கும் கடைக்குச் சென்றிருக்கிறார். அங்கு, வட மாநிலத்தைச் சேர்ந்த கடையின் உரிமையாளர் மெஹ்ராஜ் பட் என்பவருடன் மூதாட்டிக்குப் பழக்கம் ஏற்பட்டது. அதையடுத்து இருவரும் செல்போன் எண்களை மாற்றிக்கொண்டனர். பின்னர் அந்த மூதாட்டி தமிழகத்துக்கு சுற்றுப்பயணம் செய்ய சென்றார்.
அந்த காலகட்டத்தில் இருவரும் செல்போனில் தொடர்ச்சியாக பேசிக்கொண்டனர். அதனால் இவர்களின் நட்பு ஆழமானது. அதனால் மீண்டும் புதுவைக்கு வந்து சந்திப்பதாக மெஹ்ராஜ் பட்டிடம் தெரிவித்திருக்கிறார் அந்த மூதாட்டி. மெஹ்ராஜ் பட்டும் அவரைச் சந்திப்பதாக ஒப்புக்கொண்டார். அதன்படி புதுச்சேரிக்கு வந்த மூதாட்டி, கடந்த 31-ம் தேதி சுய்ப்ரேன் வீதியிலுள்ள ஒரு தனியார் விடுதியில் இருவர் தங்கும் அறையை எடுத்து தங்கினார்.