Loading

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

ஆஸ்திரேலியாவின் மெர்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் 12-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீரரான கிரீஸின் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், 18-ம் நிலை வீரரான ரஷ்யாவின் கரேன் கச்சனோவுடன் மோதினார்.

3 மணி நேரம் 21 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 7-6 (7-2), 6-4, 6-7 (6-8), 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் தனது 4-வது முயற்சியில் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார். 2019, 2021, 2022-ம் ஆண்டு தொடர்களில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் அரைஇறுதியுடன் வெளியேறி இருந்தார்.கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது 2-வது முதன்முறை. 2021-ம் ஆண்டு அவர், பிரெஞ்சு ஓபனில் இறுதி சுற்றில் விளையாடி இருந்தார். அப்போது அவர், சாம்பியன் பட்டத்தை செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சிடம் இழந்திருந்தார்.

சுவாரஸ்யமாக தற்போதைய ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியிலும் நோவக் ஜோகோவிச்சுடனே மோத உள்ளார் 24 வயதான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ். 9 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நோவக் ஜோகோவிச் அரை இறுதி சுற்றில் 7-5,6-1,6-2 என்ற நேர்செட்டில் 35-ம் நிலை வீரரான அமெரிக்காவின் டாமி பாலை தோற்கடித்தார்.

இந்த ஆட்டம் 2 மணி நேரம் 20 நிமிடங்களில் முடிவடைந்தது. நாளை (29-ம் தேதி) நடைபெறும் இறுதிப் போட்டியில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ், நோவக்ஜோகோவிச்சை எதிர்த்து விளையாடுகிறார். இதில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் சாம்பியன் பட்டம் வென்றால், டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தை கைப்பற்றுவார்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *