Loading

கிருத்திகா தங்களை மீறி திருமணம் செய்ததால் ஆத்திரம் அடைந்த அவரின் பெற்றோர், காரில் சென்றுகொண்டிருந்த வினித்,கிருத்திகா-வை விரட்டியிருக்கிறார்கள். அதனால் அச்சம் அடைந்த இருவரும் காரை நிறுத்திவிட்டு அருகில் இருந்த உறவினர் ஒருவரின் மரம் அறுவை மில்லுக்குள் நுழைந்துள்ளனர். அங்கு வந்த நவீன் பட்டேல் மற்றும் அவருடன் வந்தவர்கள், மணமகன் வினித்தை அடித்து உதைத்ததுடன், மணமகள் கிருத்திகாவை காரில் கடத்திச் சென்றனர்.

பெண்ணை வெளியே இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி

பெண்ணை வெளியே இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி

கடத்தல் கும்பல் பயன்படுத்திய கார் புதியதாக இருந்ததால் அதில், நம்பர் பிளேட் இருக்கவில்லை. இந்த கடத்தல் சம்பவம் நடந்ததும் மணமகன் வினித், குற்றாலம் காவல்நிலையத்துக்குச் சென்று புகார் அளித்துள்ளார். ஆனால், அவரின் புகாருக்கு ரசீது கூட கொடுக்காத போலீஸார் அவரை அலைக்கழித்ததாக குற்றம்சாட்டுகின்றனர் வினித் உறவினர்கள். இந்த விவரம் உயரதிகாரிகளுக்குத் தெரியவந்த பின்னர், மறுநாள் (26-ம் தேதி) மாலை நவீன் பட்டேல் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, மணமகள் கடத்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மண்மகள் கிருத்திகாவை கடத்திச் சென்ற கும்பல் ஜார்க்கண்ட், குஜராத், கேரளா ஆகிய மாநிலங்களுக்குச் சென்றிருக்கக் கூடும் என்ற தகவலின் அடிப்படையில்,5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தென்காசி பகுதியில் இந்த கடத்தல் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *