கிழக்கு ஜெருசலம் வழிபாட்டு தலத்துக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஜெருசலம் கிழக்கு பகுதியில் இஸ்ரேல் கடந்த சில மாதங்களாக பல லட்சம் யூதர்களை குடியமர்த்தி, பாலஸ்தீன மக்களை வெளியேற்றுவதில் மும்முறம் காட்டி வருகிறது. மேலும், பாலஸ்தீனப் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து ஆக்கிரமிப்புகளை அதிகரித்துவருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், யூதர்கள் கூட்டமாக வழிபாடு செய்யும் வழிப்பாட்டு தளத்தில், மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடந்தியிருப்பதாக கூறப்படுகிறது.