விழுப்புரம்: திண்டிவனத்தில் காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திண்டிவனம் சேடன்குட்டை தெருவைச் சேர்ந்தவர் முருகன் (58), காவல் உதவி ஆய்வாளர். இவரது சொந்த ஊர் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமம். இவர் தியாகதுருகம் காவல் நிலையத்தில் கடந்த ஓராண்டாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 20 நாட்களுக்கு முன்பு இவரது தாயார் உயிரிழந்ததால் மிகுந்த வருத்தத்தில் இருந்ததாக தெரிகிறது.