கேரள லாட்டரியில் 25 கோடி ரூபாய் ஓணம் பம்பர் பரிசாக வென்ற அனூப் என்ற நபரை யாரும் மறந்திருக்க வாய்ப்பு இல்லை.
திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அனூபுக்கு கேரள அரசு சார்பில் கடந்த செப்டம்பர் 18-ம் தேதி நடந்த திருவோணம் பம்பர் லாட்டரி குலுக்கலில் முதல் பரிசான 25 கோடி ரூபாய் பரிசு கிடைத்தது. தனது மகன் சேமித்து வைத்த உண்டியலை உடைத்து அந்த பணத்தில் 500 ரூபாய்க்கு லாட்டரி சீட்டு வாங்கியதாகவும். வெளிநாட்டுக்குச் செல்வதற்காக கேரளா கூட்டுறவு வங்கியில் 5 லட்சம் ரூபாய் கடன் கேட்டிருந்ததாகவும், லாட்டரி பரிசு கிடைத்ததால் லோன் வேண்டாம் என வங்கியில் கூறிவிட்டதாகவும் அனூப் அப்போது தெரிவித்திருந்தார்.
25 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ள அனூபுக்கு 10 சதவீதம் ஏஜெண்ட் கமிஷன் மற்றும் 30 சதவீதம் வரி போக 15.75 கோடி ரூபாய் வங்கி கணக்கில் வந்துள்ளது. அந்தப் பணத்தில் தொழில் செய்யபோவதாக ஏற்கனவே அனூப் கூறியிருந்தார்.