அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் கீழ்வீதி கிராமத்தில் திரவுபதியம்மன் மற்றும் மண்டியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் மயிலேறு திருவிழா வெகுவிமர்சையாக நடப்பதும் இதில், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதும் வழக்கம்.