ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே ஐ.டி. ஊழியரிடம் நூதன முறையில் நகை, பணத்தை வழிப்பறி செய்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

ராமேசுவரத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர். பொறியியல் பட்டதாரியான இவர் ஐ.டி. நிறுவன ஊழியர். ஓரினச் சேர்க்கை யாளர்களுக்கான மொபைல் ஆப் மூலம் தனக்கான துணையை அவர் தேடி இருக்கிறார். அந்த ஆப் மூலம் அறிமுகமானவர், ஐ.டி. ஊழியரை ராமேசுவரம் அருகே வேதாளைக்கு வருமாறு கூறியுள்ளார்.

அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை வேதாளை பேருந்து நிலையத்துக்கு சென்ற அவரை தனது மோட்டார் சைக்கிளில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத வேதாளை வடக்கு கடற்கரைக்கு அந்த நபர் அழைத்துச் சென்றார். அங்கு 5 பேர் நின்றிருந்தனர். ஆறு பேரும் சேர்ந்து ஐ.டி. ஊழியரை தாக்கி ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி, மோதிரம், ரூ.1000-த்தை பறித்துக் கொண்டதுடன் அவரிடம் இருந்து மொபைல் மற்றும் 2 ஏடிஎம் அட்டைகளைப் பெற்று, அதில் இருந்த ரூ.36 ஆயிரத்தையும் எடுத்துக் கொண்டனர்.

மேலும் ஐ.டி. ஊழியரை ஆடைகளை களைந்து வீடியோ எடுத்து நடந்ததை வெளியில் சொன்னால் சமூக வலைதளத்தில் வெளியிடுவோம் என மிரட்டினர். பின்னர் அவர்கள் தப்பி விட்டனர். இது குறித்து மண்டபம் காவல் நிலையத்தில் ஐ.டி. ஊழி யர் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *