எல்லோரையும் சிரிக்க வைத்த வைகைப்புயல் வடிவேலுவை அவர் தாயார் சரோஜினி அழ வைத்துச் சென்றுள்ளார்.
மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் 87 வயதான தாயார் சரோஜினி உடல்நலக் குறைவு காரணமாக நான்கு நாள்களுக்கு முன்பு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மரணமடைந்தார்.
இவருக்கு வடிவேலுவுடன் சேர்த்து 5 ஆண், 2 பெண் என மொத்தம் 7 பிள்ளைகள். வடிவேலு மீது மிகவும் பாசம் வைத்தவர், அவர் கலைத்துறையில் வெற்றிபெற நம்பிக்கை ஊட்டியவர்.





இவரது மறைவுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் ஆறுதல் கூறினார். அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்தனர்.