திருச்சி: திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியிலுள்ள பிவிவி காலனியை சேர்ந்தவர் மேகநாதன் (64). இவர் தனது வீட்டிலுள்ள இரும்பு பெட்டகத்துக்குள் கடந்த 2021-ம் ஆண்டு 107 பவுன் நகைகளை வைத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 18-ம் தேதி பெட்டகத்தை திறந்து பார்த்தபோது, அதில் நகைகள் இல்லாதது கண்டு மேகநாதன் அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.