கட்டபொம்மன் வீழ்த்த முடியாத மன்னன். அவனை காட்டிக்கொடுத்தது எட்டப்பன். புதுவையில் 8 எட்டப்பன்கள் சேர்ந்து காங்கிரஸை வீழ்த்தினார்கள். அந்த 8 எட்டப்பன்களும் ரங்கசாமியை இப்போது உதைக்கின்றனர். அந்த உதையை வாங்கிக்கொண்டு, வலித்தாலும் நாற்காலியை விட்டுக்கொடுக்காமல் இருப்பவர் ரங்கசாமி. இதை மக்களிடம் சொல்லவேண்டிய வேலை காங்கிரஸுக்குத்தான் இருக்கிறது. புதுவையில் அதிமுக படுத்துவிட்டது. நமது கூட்டணியும் வேகமாகச் செயல்படவில்லை. எதையும் எதிர்பார்க்காமல் செயல்படும் காங்கிரஸ் கட்சிதான் வேகமாகச் செயல்பட வேண்டும். நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது. காங்கிரஸ் மட்டுமே துணிந்து நிற்கும் கட்சியாக இருக்கிறது.

பிரதமர் மோடியுடன் முதல்வர் ரங்கசாமி

பிரதமர் மோடியுடன் முதல்வர் ரங்கசாமி

புதுவையில் குழந்தைகளுக்குப் பால் தட்டுப்பாடு. ஆண்கள் மது குடித்து அழிந்துவிட்டனர். பெண்கள் விதவைகளாகும் நிலையில் இருக்கிறார்கள். அவர்களையும் அழிக்க பிராந்திக் கடையில் பெண்களுக்கு இலவச மது வழங்குகின்றனர். முதலமைச்சரிடம், `இப்படிக் கடைகளை திறப்பது நியாயமா?’ எனக் கேட்டால், “எனக்காகச் செய்யவில்லை, மக்களுக்காகச் செய்கிறேன். ரூ.1,000 கொடுக்க என்னிடம் காசு இல்லை. மற்ற திட்டங்களுக்குக் காசு இல்லை. இதிலிருந்துதான் பணம் தருகிறேன்” என்கிறார். குடும்பத்தை அழித்துவிட்டு ரூ.1,000 வழங்குவதில் என்ன பயன் இருக்கிறது?” என்றார் காட்டமாக.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *