<p>இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் &nbsp;கடந்த ஜனவரி 18 ஆம் தேதி நடைபெற்றது.</p>
<p><strong>தொடரை வென்ற இந்தியா:</strong></p>
<p>இப்போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இந்தியா- நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.&nbsp;</p>
<p>நியூசிலாந்து இடையிலான இன்றைய போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 24ம் தேதி இந்தூரில் நடைபெற இருக்கிறது.&nbsp;</p>
<p><strong>முதலிடத்தை இழந்த நியூசிலாந்து:</strong></p>
<p>இந்த போட்டி முடிவடைந்ததும் ஒருநாள் அணிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி தற்போது வெளியிட்டது. தொடரை இழந்ததால் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து அணி 2 புள்ளிகள் சரிந்து 113 புள்ளிகளுடன் 2ம் இடத்திற்கு சென்றது. அதன்படி, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் இந்தியா அணி தலா 113 புள்ளிகளுடன் முதல் 3 இடங்களில் உள்ளனர். 112 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 4வது இடத்திலும், 106 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 5வது இடத்திலும் உள்ளனர்.&nbsp;</p>
<p>தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா 100 புள்ளிகளுடன் 6வது இடம், வங்கதேசம் 95 புள்ளிகளுடன் 7வது இடம், இலங்கை 88 புள்ளிகளுடன் 8 வது இடத்திலும், தலா 71 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் 9 மற்றும் 10 இடத்தில் உள்ளனர்.&nbsp;</p>
<p>இந்த தொடருக்கு முன்னதாக 115 புள்ளிகளுடன் நியூசிலாந்து அணி கம்பீரமாக முதலிடத்தில் இருந்தது. இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், இந்தியா 111 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் இருந்தனர்.&nbsp;</p>
<p><strong>இந்தியா வெற்றி:</strong></p>
<p>தொடர்ந்து, கேப்டன் லாதம் 17 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில், தாகூர் பந்து வீச்சில் அவுட்டானர். இதன் மூலம், 15 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி தடுமாறியது.&nbsp;கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரேஸ்வெல், இன்றைய போட்டியில் 22 ரன்கள் எடுத்து இருந்த போது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் பிரேஸ்வெல் 78 பந்துகளில் 140 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. ஆரம்பம் முதலே தடுமாறிய நியூசிலாந்து அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட, சாண்ட்னர் 27 ரன்கள் எடுத்திருந்த போது பாண்ட்யா பந்துவீச்சில் போல்ட் ஆனார்.</p>
<p>சாண்ட்னர் – பிலிப்ஸ் ஜோடி 7வது விக்கெட்டிற்கு 47 ரன்களை சேர்த்தது. இந்திய அணியின் பந்துவீச்சை ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடிய பிலிப்ஸ், 36 ரன்கள் எடுத்திருந்தபோது வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த பெர்கூசன் மற்றும் டிக்னெர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அந்த அணி, 34.3 ஓவர்களில், 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக, ஷமி 3 விக்கெட்டுகளையும், பாண்ட்யா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.&nbsp;</p>
<p><strong>இந்திய அணி அபாரம்:</strong></p>
<p>இதையடுத்து, 109 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் பொறுப்புடன் ஆடினர். ஒருபுறம் இளம் வீரர் சுப்மன் கில் நிதானமாக ஆட, மறுமுனையில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடி கட்டினார். 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உட்பட 47 பந்துகளில், ஒருநாள் போட்டிகளில் தனது 48வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடியோ இந்திய அணிக்கான வெற்றி இலக்கை அடைந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 51 ரன்கள் எடுத்து இருந்தபோது ரோகித் சர்மா ஷிப்லே பந்துவீச்சில், எல்.பி.டபள்யூ. முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். சுப்மன் கில் – ரோகித் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 72 ரன்களை சேர்த்தது.</p>
<p>அடுத்ததாக களமிறங்கிய கோலி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம், &nbsp;வெறும் &nbsp;20.1 ஓவர்கள் முடிவில் 111 ரன்களை சேர்த்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-0 என கைப்பற்றி அசத்தியது.&nbsp;</p>
<p>&nbsp;</p>

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *