Loading

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் அ.தி.மு.க கட்சி சார்பில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டம், கரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அ.தி.மு.க முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், “தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு, காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெற்றுவருகிறது. கரூரிலும் 24 மணி நேரமும் மது விற்பனை நடக்கிறது. அரசு மதுபானக் கடைகளில் இரண்டு வகையான மதுக்கள் விற்பனை செய்யப்பட்டுவருகின்றம்ன. அரசு கொள்முதல் செய்யும் மதுபானங்கள் தவிர, பார்களில் இருபது ரூபாய்க்கு வாங்கப்படும் மது வகைகள் 200 ரூபாய்க்குத் தனியாக விற்பனை செய்யப்படுகின்றன.

பொதுக்கூட்டத்தில் பேசும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

பொதுக்கூட்டத்தில் பேசும் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

தமிழக மதுவிலக்குத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான கரூரில், திருவள்ளுவர் தினத்தில் மது விற்பனை நடைபெற்றது. இது குறித்து, செய்தித்தாள்களில் செய்தி வந்திருக்கிறது. ஆனால், எவ்வித நடவடிக்கையையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி பெற்றுத்தந்தது அ.திமுக அரசு. கரூர் அரவக்குறிச்சி பூலாம்வலசு பகுதியில் பாரம்பர்ய முறைப்படி நடத்தப்படும் பூலாம்வலசு சேவல் கட்டு போட்டி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால், போட்டி நடைபெறவில்லை. நான் அமைச்சராக இருந்தபோது, மூன்று முறை அனுமதி பெற்றுக் கொடுத்து, சேவல் கட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. நடப்பாண்டில் அனுமதி பெற்றுக்கொடுத்து சேவல் சண்டை நடத்துவதற்கு, கரூர் மாவட்டத்திலுள்ள அமைச்சருக்கு நேரமில்லை.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *