இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷெர்பின் அருளிடம் பேசினோம், ”கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 526 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 11 மற்றும் 12ம் வகுப்பில் வேளாண் பிரிவில் மட்டும் 40 மாணவர்கள் படிக்கின்றனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்ததன்படி எங்க பள்ளியில் பசுமைப் பள்ளித்திட்டம் அமைக்கப்பட்டது.
25 சென்டில் குளிர்காலங்களில் தாவரங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பாலி ஹவுஸ் மற்றும் கோடை காலங்களில் தாவரங்களுக்கு பாதிப்பை உண்டாக்காத கிரீன் ஹவுஸ் அமைக்கப்பட்டது. இவற்றில் காய்கறி தோட்டம், மூலிகை செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது. தக்காளி, கத்திரி, மிளகாய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள், ஆடாதொடை, துளசி, கீழாநெல்லி போன்ற மூலிகை செடிகள் வைக்கப்பட்டுள்ளன.