ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.  

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா உடல்நலக் குறைவு காரணமாக, ஜனவரி 4ஆம் தேதி காலமானார். இதைத் தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனிடையே, திமுக கூட்டணி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ்தான் மீண்டும் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருந்தார். அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.  

இதையும் படிக்க- பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த அரசுப் பேருந்து தானாக இயங்கி விபத்து!

சென்னையில் 2 நாட்களாக ஆலோசனை நடைபெற்று வந்த நிலையில் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா.வின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *