தற்போதைய அரசியல் களம் எப்படியிருக்கிறது? சினிமா நட்சத்திரங்கள் அரசியலுக்கு வருவது இப்பவும் எடுபடுமா?
“காயத்ரி ரகுராமை அரசியலில் சேர்க்க முடியாது. குஷ்பு ஒருகாலத்தில் கொடிகட்டி பறந்தவங்க. இப்ப குடும்பமா செட்டில் ஆனபிறகு பொது வாழ்க்கைக்கு வந்திருக்காங்க. காயத்ரி ரகுராமையும் குஷ்புவையும் கம்பேர் பண்ணமுடியாது. சினிமா பிரபலங்களின் அரசியல் ஆளுமை எம்.ஜி.ஆர் காலத்தோட முடிஞ்சுபோச்சு. அதன்பிறகு எந்தத் தலைமுறையும் வர வாய்ப்பே இல்லை. சிலர் நிறைய ரசிகர்கள், ஃபாலோயர்ஸ் இருப்பதாகச் சொல்லலாம். ஆனால், பழைய நிலை இனி வராது.
ஆந்திராவில் ஓகோவென இருந்த சினிமா பிரபலங்கள் அரசியல்கட்சி ஆரம்பிச்சு பார்த்தாங்க, முடியல. இந்தியாவில் மக்களிடம் அரசியல் வேறு சினிமா வேறு என்ற எண்ணம் வந்துவிட்டது.”

சமீபத்திய சமூகப் பிரச்னைகளைக் கவனிக்கிறீர்களா?
“மேல் சாதி, கீழ் சாதி என்ற விஷயமே சினிமாவில் கிடையாது. நாங்கள் பட்டியலின மக்களையும், மற்றவர்களையும் ஒன்றாகத்தான் பார்க்கிறோம். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் ஒன்றாகத்தான் இருக்கிறோம். ஆனால் சிலபேர் எதையாவது பேசித் தப்பான வழிகாட்டுதல் செய்கிறார்கள்.
சினிமாவில் உள்ள சிலர் மத்திய அரசுக்கு எதிராகவும் பா.ஜ.க-வுக்கும் எதிராகப் பேசுவதற்கு இங்குள்ள திராவிட கட்சிகள்தான் காரணம். 40 வருடத் திராவிடத்தை பி.ஜே.பி வந்து உடைப்பதைத் தாங்காத கொந்தளிப்புதான் இதற்குக் காரணம்!”