ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் ஜெகதீசன் சதம் கடந்தார். இந்திரஜித், பிரதோஷ் உள்ளிட்டோர் அரை சதம் அடிக்க, தமிழக அணி முதல் இன்னிங்சில் 300 ரன்களை கடந்தது. இந்தியாவில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் 88வது ‘சீசன்’ நடக்கிறது. சென்னையில் நேற்று துவங்கிய ‘பி’ பிரிவு லீக் போட்டியில் தமிழகம், அசாம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற தமிழக அணி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தது. தமிழக அணியின் சாய் சுதர்சன் இரண்டு ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி தந்தார். பாபா அபராஜித் (23) விரைவில் திரும்பினார். ஜெகதீசன், கேப்டன் இந்திரஜித்