மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போதிய இடமில்லாமல் கிடைக்கும் சிறிய இடங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதனால் சரியான வழிகாட்டி பலகைள், வழிகாட்டிகளும் இல்லாமல் சிகிச்சைக்கு வரும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மிகுந்த சிரமம் அடைகிறார்கள்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, ஒரே இடத்தில் இல்லாமல் மூன்று இடங்களில் அமைந்துள்ளது. பழைய கட்டிடம் கோரிப்பாளையத்திலும், தலைக்காயம் மற்றும் எலும்பு முறிவு சிகிச்சைப்பிரிவு அண்ணா பஸ்நிலையம் அருகேயும், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவக்கல்லூரி மைதானத்திலும் தனித்தனியாக உள்ளன. இந்த மூன்று இடங்களிலும் என்னென்ன சிகிச்சைப் பிரிவுகள் அமைந்துள்ளது என்பது எல்லோருக்கும் தெரியாது. அதனால், பழைய கட்டிடத்திற்கு சென்று அங்குள்ளவர்களிடம் விசாரித்தப்பிறகே மற்ற இடங்களுக்கு சிகிச்சைப்பெற வருகிறார்கள்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *