கோப்புப் படம்

கோப்புப் படம்

 

ஈரோடு: 5 பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்து, காரில் இருந்த ரூ.2 கோடி பணத்தை ஐந்து பேர் கொண்ட கும்பல் சனிக்கிழமை (ஜன.21) திருடிச் சென்ற சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து காவல்துறையினர் தெரிவித்ததாவது: ஆந்திரம் மாநிலம் நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த விகாஷ் என்பவர் ஓட்டி வந்த கார் சனிக்கிழமை காலை பவானியில் இருந்து கோவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

கார் லட்சுமி நகர் பகுதியில் வந்துகொண்டிருந்த போது ஐந்து பேர் கொண்ட கும்பல் காரை வழிமறித்தது. காரை விகாஷ் நிறுத்தியதும் காரில் இருந்த விகாஷை இறக்கி விட்டு பணத்துடன் காரை கடத்திச் சென்றதாக  காவல்துறையினர் தொரிவித்துள்ளனர்.

இந்த பணம் விகாஷின் பணமா அல்லது முறைகேடாக சம்பாதித்த பணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *