திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பெட்ரோல் பங்க் அருகே ஆம்னி வேன் தீப்பிடித்து எரிந்தது. திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் அருகே தோப்புப் பட்டியைச் சேர்ந்தவர் கதிரேசன்.
இவரது ஆம்னி வேனை பழுது பார்ப்பதற்காக அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கம் திண்டுக்கல்லுக்கு ஓட்டிச் சென்றார். வேனில் நாகேந்திரன்(26), விக்னேஷ்(18) ஆகியோர் இருந்தனர். திண்டுக்கல்லில் கரூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஆம்னி வேனுக்கு பெட்ரோல் நிரப்பினர். அங்கிருந்து வெளியேறும் முன்பு வேனின் கீழ் பகுதியில் இருந்து தீப்பொறி பறந்து மளமளவென எரியத் தொடங்கியது.