இவரின் பதிவு சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து கோவை விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவனிடம் விளக்கம் கேட்டபோது, “குடியரசு தினவிழாவை முன்னிட்டு உச்சகட்ட எச்சரிக்கை அளிக்கப்பட்டிருக்கிறது. போர்டிங்குக்கு முன்பாக பயணிகளை இரண்டு முறை சோதனை செய்ய உத்தரவிட்டிருக்கின்றனர். சென்னை விமான நிலையம் உள்பட எல்லா விமான நிலையத்துக்கும் இந்த உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.
எல்லோரையும் சோதனை செய்வது கடமை. அமைச்சர்கள், எம்.பி உள்ளிட்ட குறிப்பிட்ட சிலருக்கு தான் இதில் விலக்கு. நானே சென்றால் கூட சோதனை நடத்த ஒத்துழைப்பு வழங்கி ஆகவேண்டும். குறிப்பிட்ட தினத்தில் அவர்களை மட்டும் சோதனை செய்தார்களா, மற்றவர்களை சோதனை செய்யவில்லையா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.” என்றார்.