புதுடில்லி: தற்போது பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், புதன்கிழமையன்று துவங்க உள்ள பார்லிமென்ட் கூட்டத்தொடரை புறக்கணிப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 7 ம் தேதி துவங்குகிறது. குஜராத் சட்டசபை தேர்தல் காரணமாக ஒரு மாதம் கால தாமதமாக இந்த தொடர் துவங்குகிறது. இந்த கூட்டத்தொடர் குறித்து ஆலோசிப்பதற்காக இன்று மாலை முக்கிய கூட்டம் நடக்கிறது. சோனியா தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் பார்லிமென்டில் காங்., நிலைப்பாடு மற்றும் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் பதவி குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.

முடிவு

latest tamil news

இதனிடையே, இந்த கூட்டத்தொடரில் ராகுல், அவருடன் பாத யாத்திரையில் ஈடுபட்டுள்ள ஜெய்ராம் ரமேஷ் , திக்விஜய் சிங் ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. பாத யாத்திரையில் இருந்து கவனத்தை திசை திருப்பாமல், தொடர்ந்து அதனை நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பார்லிமென்ட் கூட்டத்தொடரை அவர்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *