புதுச்சேரி: புதுச்சேரியில் பொங்கல் பண்டிகைக்குள் மாணவர்களுக்கு லேப்டாப், மதிவண்டி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.
புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை சார்பில் மண்டல அறிவியல் கண்காட்சி கடந்த 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தொடர்ந்து, மாநில அறிவியல் கண்காட்சி டிச.1, 2 ஆகிய தேதிகளில் நடந்தது. இக்கண்காட்சியை 120 பள்ளிகளில் இருந்து 15,735 மாணவர்கள், 809 பொது பார்வையாளர்கள், 687 ஆசிரியார்கள் பார்வையிட்டனர். கண்காட்சியின் நிறைவு விழா இன்று மாலை நடைபெற்றது. பள்ளி கல்வி இணை இயக்குநர் சிவகாமி வரவேற்றார். கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார். ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் எம்எல்ஏ வாழ்த்தி பேசினார்.