பொய்யர்களின் கூடாரம்!
போதை, ஊழல், மோசடி ஆகிய மூன்று விஷயங்கள் தான் ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை கொள்கைகள். அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் வரிசையாக சிறைக்கு செல்கின்றனர். பொய்யர்களின் கூடாரமாக ஆம் ஆத்மி உள்ளது.
அனுராக் தாக்குர்
மத்திய அமைச்சர், பா.ஜ.,
தவறாக வழிநடத்த வேண்டாம்!
ஒடிசா மக்களை தவறாக வழிநடத்துவதை பா.ஜ., தலைவர்கள் தவிர்க்க வேண்டும். ஏழைகளுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பதை நிறுத்த வேண்டும்.
நவீன் பட்நாயக்
ஒடிசா முதல்வர், பிஜு ஜனதா தளம்
இதே வேலையாகப் போச்சு!
எப்போதெல்லாம் தேர்தல் நடக்கிறதோ, அப்போதெல்லாம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தப் போவதாக கூறுவதை பா.ஜ.,வினர் வழக்கமாக வைத்துள்ளனர். இவர்களுக்கு இதே வேலையாகி விட்டது.
ஜெய்ராம் ரமேஷ்
மூத்த தலைவர், காங்கிரஸ்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement