Loading

நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் வலுதூக்கும் போட்டியில் கலந்துகொண்ட வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சீவூரைச் சேர்ந்த வீரர் ஜெயமாருதி முதலிடம் பிடித்து, 4 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த சீவூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசிய வலுதூக்கும் வீரர் மூர்த்தியின் மகன் ஜெயமாருதி(17). இவர் வேலூரிலுள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது 12 வயதிலிருந்தே வலுதூக்கும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த ஆகஸ்ட் மாதம் கேரள மாநிலம், காசர்கோட்டில் நடைபெற்ற தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில் 74 கிலோ உடல் எடை பிரிவில் பங்கேற்று 4- தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

image

இதையடுத்து தற்போது நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் கடந்த நவம்பர் மாதம் 27-இல் தொடங்கி, டிசம்பர் மாதம் 4- ஆம் தேதி வரை நடைபெறும் காமன்வெல்த் வலுதூக்கும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு, அங்கு சென்று போட்டிகளில் பங்கேற்றார்.

image

அங்கு நடைபெற்ற போட்டியில் 74-கிலோ எடைப் பிரிவில் ஸ்குவாட் 253-கிலோ தூக்கி தங்கப் பதக்கமும், புதிய உலக சாதனையும் நிகழ்த்தினார். பெஞ்ச் பிரஸ் பிரிவில் 137.5 கிலோ தூக்கி தங்கப் பதக்கமும், டெட்லிப்ட் பிரிவில் 245 கிலோ தூக்கி தங்கப் பதக்கமும், ஒட்டுமொத்தமாக 635.5 கிலோ தூக்கி மொத்தம் 4- தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

image

மேலும் நாளை நியூசிலாந்தில் இருந்து சொந்த ஊர் திரும்பும் ஜெய மாருதிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க சீவூர் கிராம பொதுமக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *