திருவிளையாடல் புராணம், முக்கூடற்பள்ளு, பெரியபுராணம் என சங்கத்தமிழ் இலக்கியங்களில் தாமிரபரணி, பொருநை நதி என்றே அழைக்கப்படுகிறது. இதனை பல்வேறு தமிழறிஞர்களும், அகழ்வாராய்ச்சியாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். கி.பி 1011 -ல் பதிக்கப்பட்ட முதலாம் ராஜேந்திர சோழனின் கல்வெட்டிலும் பொருநை நதி என்றே உள்ளது. அதனால் தாமிரபரணியின் பெயரை பொருநை நதி என தமிழில் மாற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு, “தமிழ் கண்டதோர் வையை பொருநை நதி என்று பாரதியார் பாடியுள்ளார். ‘பொருநையந் திருநதியின் இருகரையும் இருபூவும் பூஞ்சாலி விளையவே கூவாய் குயிலே’ என்ற பாட்டின் மூலம் பூஞ்சாலி வகை நெல்லை விளைவிக்க பொருநை நதி உதவியாக இருக்கிறது என்று பெருமை பாடப்பட்டுள்ளது.