வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் 138வது பிறந்தநாள் இன்று(டிச.,03) கொண்டாடப்படுகிறது.
ராஜேந்திர பிரசாத்:
ராஜேந்திர பிரசாத், ஜனவரி 26, 1950 முதல் மே 13, 1962 வரை நாட்டின் முதல் ஜனாதிபதியாக பணியாற்றினார். இவர் மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்.
இந்த நிலையில்,மாஜி ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: ராஜேந்திர பிரசாத் ஒரு பழம்பெரும் தலைவர், அவர் தைரியத்தையும் அறிவார்ந்த ஆர்வத்தையும் வெளிப்படுத்தினார்.
அவர் இந்தியாவின் கலாச்சாரத்தில் உறுதியாக, வளர்ச்சிக்கான எதிர்கால பார்வையையும் கொண்டிருந்தார். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement