பெங்களூரு,-நிலக்கரி சுரங்கங்களின் ஏலத்தில், பங்கேற்போர் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க, மத்திய நிலக்கரி அமைச்சகம், பெங்களூரில் இன்று முதலீட்டாளர்கள் மாநாடு ஏற்பாடு செய்துள்ளது.
நிலக்கரி சுரங்கங்களின் ஏலம் தொடர்பாக, நாட்டின் பல இடங்களில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது.
இந்துார், மும்பையில் ஏற்கனவே மாநாடுகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
பெங்களூரில் இன்று மாநாடு நடக்கவுள்ளது. மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தலைமையில் நடக்கும் மாநாட்டில், முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய நிலக்கரி அமைச்சக செயலர் அம்ருத் லால் மீனா, மத்திய சுரங்க அமைச்சகத்தின் செயலர் விவேக் பரத்வாஜ் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement