இது பற்றி அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசியவர், “ஆஸ்கர் விருது விழாவில் நான் நடந்துகொண்ட விதம் குறித்து மிகவும் வருத்தப்பட்டேன்.
அன்று இரவு மிகவும் கொடூரமான இரவாக இருந்தது. இருப்பினும் நான் செய்த அந்தச் செயலை நியாயப்படுத்த விரும்பவில்லை. அன்று நான் வீட்டுக்குச் சென்றவுடன் என் வீட்டில் இருக்கும் ஒன்பது வயது சிறுவன் ஒருவன், ‘அவரை ஏன் அடித்தீர்கள், வில் மாமா?’ என்று கேட்டான். அப்போது ஒரு மனிதனாக என்னை நானே வெறுத்தேன்” என்று கூறினார்.
மேலும், “நான் செய்த வெறுக்கத்தக்க இச்செயலுக்காக எனது திரைப்படங்களைக் காண மக்கள் தயாராக இல்லை என்றால், அவர்களது முடிவை நான் முற்றிலும் மதித்து ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், எனது செயல்களால் படக்குழுவிற்கு எந்தப் பாதிப்புகளும் ஏற்படக் கூடாது என விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.