இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது வெளியுறவுக் கொள்கை குறித்த முதல் முக்கிய உரையில், “பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். முன்னாள் பிரதம மந்திரி டேவிட் கேமரூனால் ஏற்படுத்தப்பட்ட இங்கிலாந்து-சீனா உறவுகளின் பொற்காலம் முடிந்துவிட்டது. வணிகம் தானாகவே இரு நாடுகளுக்கிடையே சமூக, அரசியல் சீர்திருத்தத்துக்கு வழிவகுக்கும். எங்கள் மதிப்புகள், நலன்களுக்கு சீனா ஒரு சவாலை முன்வைத்திருக்கிறது.
உலகளாவிய பொருளாதார உறுதித்தன்மை, காலநிலை மாற்றம் போன்ற விவகாரங்களில் சீனாவின் முக்கியத்துவத்தை நாம் வெறுமனே புறக்கணிக்க முடியாது. ஆனால், இது இன்னும் பெரிய சர்வாதிகாரத்தை நோக்கி நகரும்போது இன்னும் தீவிரமாக வளரும். அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் பல நாடுகள் இதை புரிந்துகொண்டிருக்கின்றன. சீனா உள்நாட்டு மற்றும் உலகளாவிய பாதுகாப்புக்கு நம்பர் ஒன் அச்சுறுத்தல்” எனத் தெரிவித்திருக்கிறார்.