காரைக்கால்: கல்வித் துறையில் மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட நலத்திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தி காரைக்கால் திருப்பட்டினம்
கடைவீதியில் காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
கல்வித்துறையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். மாநில காங். தலைவர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் சந்திரமோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து
கொண்டனார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடைகளை உடனே வழங்க வேண்டும். மாணவர்களுக்கு ஒரு ரூபாய் கட்டண சிறப்பு பேருந்தை இயக்க வேண்டும். மதிய உணவில் நிறுத்தப்பட்ட முட்டையை வழங்க வேண்டும். இலவச லேப்டாப் மற்றும் சைக்கிள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement