திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகிற டிசம்பர் 6 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். 

முன்னதாக, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (நவ. 27) கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

டிசம்பா் 3-ஆம் தேதி பஞ்ச ரதங்களின் தேரோட்டமும், முக்கிய திருவிழாவான கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது. 

திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி சிறப்புப் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *