அ.தி.மு.க ஆட்சியில்…
அ.தி.மு.க ஆட்சியில், தமிழ்நாடு மீன்வளம், கால்நடை பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடத்தவும், விசாரணை செய்வதற்கும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் செய்யப்பட்ட சட்டத் திருத்தங்கள், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை தமிழ்நாடு அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதாக்கள், சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவது தொடர்பான மசோதா, ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதா, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி உறுப்பினரை தேர்வு செய்வதை தடுக்கும் சட்டத் திருத்தம், அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர் சட்டம், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத் திருத்தம்,
நகராட்சி சட்டங்கள் மற்றும் சென்னை பெருநகரக் குடிநீர் வழங்கல் சட்டத் திருத்தங்கள், மதுரை, கோவை, திருப்பூர், ஒசூர் நகர வளர்ச்சிக் குழுமங்கள் உருவாக்குவது தொடர்பான தமிழ்நாடு நகர ஊரமைப்பு திட்ட மசோதா, தமிழக சட்டப்பேரவையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினரை தேர்வு செய்வதை நிறுத்தி வைப்பதற்கான சட்டத்திருத்தம், டி.என்.பி.எஸ் தேர்வில் தமிழ் பாடத்தையும் சேர்ப்பதற்கான சட்ட மசோதா உள்ளிட்டவையோடு மொத்தம் 14 மசோதாக்கள் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றுள் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு அனுப்பப்பட்ட மசோதா, மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்குவது ஆகிய இரண்டுக்கு மட்டுமே ஒப்புதல் கிடைத்துள்ளது. மற்றவை கிடப்பில் போடப்பட்டுள்ளன.