புதுச்சேரி : பதவி உயர்வு பெற்ற எம்.டி.எஸ்.., ஊழியர்களுக்கு முதல்வர் ரங்கசாமி அதற்கான ஆணையை வழங்கினார்.

புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் 124 எம்.டி.எஸ்., பணியாளர்களுக்கு ஒர்க்ஸ் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆணையினை முதல்வர் ரங்கசாமி ஊழியர்களிடம் வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், துறை செயலர் அருண், தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, பொதுப்பணித் துறை அனைத்து கோட்ட செயற்பொறியாளர்கள், கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பதவி உயர்வுக்கு முயற்சி எடுத்த முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், துறை செயலர் அருண், பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு புதுச்சேரி அரசு ஊழியர்கள் சங்கங்களின் கவுரவ தலைவர் சேஷாசலம் தலைமையில் நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *