புதுடில்லி, ”ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் எழுதப்பட்ட வரலாற்று பக்கங்களில் தொலைந்து போன நம் பாரம்பரியத்தையும், புகழ் வெளிச்சத்துக்கு வராத வீரம் மிக்க தலைவர்களை யும் கொண்டாடுவதன் வாயிலாக, கடந்த கால தவறுகளை நம் நாடு சரி செய்து கொண்டிருக்கிறது,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
400வது பிறந்த நாள்
வடகிழக்கு மாநிலமான அசாமில், முகலாயர் படையெடுப்பை எதிர்த்து போரிட்டு வென்ற தளபதி லச்சித் பார்புகானின் 400வது பிறந்த நாள், நேற்று முன்தினமும், நேற்றும் கொண்டாடப்பட்டது.
நேற்றைய நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
அடிமைப்பட்டு கிடந்தது இந்தியாவின் வரலாறு அல்ல. கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக வீரத்துடனும், துணிச்சலுடனும் போராடியதே நம் வரலாறு.
துரதிர்ஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகும், ஆங்கிலேய ஆட்சி காலத்தில் நடந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக திரித்து எழுதப்பட்ட வரலாறு தான் தொடர்ச்சியாக கற்பிக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் என்ன நோக்கத்திற்காக நம்மை அடிமைப்படுத்தினர் என்பதை மூடி மறைக்க, நாடு சுதந்திரம் அடைந்த பின் முயற்சிகள் நடந்தன. ஆனால், அவை ஈடேறவில்லை. கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் எழுந்த எதிர்ப்பின் கதைகள் வேண்டுமென்றே மூடி மறைக்கப்பட்டன.
வீரம்மிக்க தலைவர்கள்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் எழுதப்பட்ட வரலாற்று பக்கங்களில் தொலைந்து போன நம் பாரம்பரியத்தையும், புகழ் வெளிச்சத்துக்கு வராத வீரம்மிக்க தலைவர்களையும் கொண்டாடுவதன் வாயிலாக, கடந்த கால தவறுகளை நம் நாடு சரி செய்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement