சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பாட்மின்டனில் இருந்து இந்தியாவின் ஸ்ரீகாந்த் விலகினார்.
சிட்னியில், ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் 300 பாட்மின்டன் தொடர் இன்று துவங்குகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் பங்கேற்க இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் விலகினார். இதன்மூலம் அடுத்த மாதம் சீனாவில் நடக்கவுள்ள ‘வேர்ல்டு டூர் பைன்ஸ்’ தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இத்தொடருக்கு தகுதி பெற, ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றாக வேண்டிய கட்டாயம் ஸ்ரீகாந்துக்கு இருந்தது. இதனையடுத்து ‘வேர்ல்டு டூர் பைனல்ஸ்’ தொடரில் இந்தியா சார்பில் பிரனாய் மட்டும் பங்கேற்க உள்ளார். ஏனெனில், சமீபத்தில் இந்திய வீராங்கனை சிந்து இத்தொடரில் இருந்து விலகினார்.
சமீபத்தில் இந்தியாவின் லக்சயா சென், சாத்விக்சாய்ராஜ்–சிராக் ஷெட்டி, ஆஸ்திரேலிய ஓபனில் இருந்து விலகினார். இதனையடுத்து ஆஸ்திரேலிய ஓபனில் ஆண்கள் ஒற்றையரில் இந்தியா சார்பில் சமீர் வர்மா, மிதுன் மஞ்சுநாத் மட்டும் களமிறங்க உள்ளனர். பெண்கள் ஒற்றையரில் தன்யா ஹேம்நாத், அன்வேஷா கவுடா விளையாடுகின்றனர். இரட்டையரில் சிம்ரன் சிங்கி–ரித்திகா தாக்கர், ஹரிஹரண்–ரூபன் குமார் ஜோடிகள் களமிறங்குகின்றன.
Advertisement