தமிழ்நாடு, கேரளா, கர்நாடாகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நடைப்பயணத்தை நிறைவு செய்துள்ள ராகுல், நேற்று காலை மத்தியப்பிரதேச மாநில எல்லையை ஒட்டிய மராட்டிய மாநில பகுதியில் இருந்து தனது நடைப்பயணத்தை தொடங்கினார். பின்னர், மத்தியப்பிரதேசத்திற்குள் நடைப்பயணத்தை தொடர்ந்த ராகுல் காந்திக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.