அப்போது கனகசபாபதி அரசியல் ரீதியான கருத்துகளை பேசவரும்போது, தொழில் அமைப்பினர் ‘இங்கு அரசியல் பேச வேண்டாம்’ என கூறிவிட்டனர். பிறகு செல்வகுமார் பேசும்போது, தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு குஜராத் மாநிலத்தை புகழ்ந்தார். ‘முதலில் மாநில அரசிடம் உங்கள் கோரிக்கைகளை கேளுங்கள். அதன் பிறகு மத்திய அரசை கேளுங்கள்.’ என்று கூறினார்.
இதனால் கோபமடைந்த தொழில் அமைப்பினர், ‘அரசியல் வேண்டாம்’ என கூறி பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு பாஜகவினர், ‘நாங்கள் இங்கு அரசியல் செய்ய வரவில்லை. தொழில்துறையினர் பிரச்னையை பேசத்தான் வந்துள்ளோம்.’ என கூறி சென்றனர்.