Loading

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை கொலை செய்ய பா.ஜ., சதி செய்வதாக துணை முதல்வர் மணிஷ் சோடியா குற்றம்சாட்டி உள்ளார். ஆண்டுகள் மாறினாலும் குற்றச்சாட்டு மட்டும் மாறவில்லை என பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.

குஜராத் சட்டசபை மற்றும் டில்லி மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அந்த இரண்டு இடங்களிலும் பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன.

latest tamil news

இந்நிலையில், மணிஷ் சிசோடியா நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் கெஜ்ரிவாலுக்கு பா.ஜ., எம்.பி., மனோஜ் திவாரி மிரட்டல் விடுத்துள்ளார். இதன் மூலம் கெஜ்ரிவாலை கொல்ல பா.ஜ., சதி செய்வது தெளிவாகி உள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம். வழக்குப்பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

latest tamil news

இதற்கு பதிலளித்துள்ள மனோஜ் திவாரி கூறுகையில், கெஜ்ரிவாலின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தே கருத்து தெரிவித்தேன். அவரது கட்சி எம்.எல்.ஏ.,க்களை அவர்களே தாக்குகின்றனர். தொண்டர் கொலை செய்யப்பட்டார்.

இது போன்ற சூழ்நிலைகள் கவலையை தருகிறது. கொலை மற்றும் மிரட்டல் என்ற ஆம் ஆத்மியின் கதை மிகவும் பழையது. ஆண்டுகள் மாறினாலும் அவர்கள் ஒரே குற்றச்சாட்டை கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *