மங்களூர்: கர்நாடகாவின் மங்களூர் நகரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவத்துக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் கவுன்சில் என்ற பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை அறியப்படாத இந்த இஸ்லாமிக் கவுன்சிலின் பின்னணி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கோவையில் உக்கடம் ஈஸ்வரன் கோவில் முன்பாக கார் சிலிண்டர் வெடித்து முபின் என்பவர் உயிரிழந்தார். இது தொடக்கத்தில் சிலிண்டர் வெடிப்பாக கருதப்பட்டது. பின்னர் சம்பவ இடத்தில் இருந்து கோலி குண்டுகள், ஆணிகள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் முபின் பயங்கரவாத தாக்குதல் நடத்தவே காரில் சிலிண்டரை எடுத்துச் சென்றது தெரியவந்தது.