உள்ளாட்சி அதிகாரத்தை பிடுங்கியது திமுக அரசு எனக் குற்றம்சாட்டுகிறார். ஆனால் அது யார் பிடுங்கியது என நமக்கு தெரியும். உள்ளாட்சித் தேர்தலை சரியாக நடத்தாததால் தான் மாநில அரசுக்கு வரவேண்டிய பல்வேறு நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. முடிக்கப்பட்ட பணிகளுக்கு விளம்பரம் செய்வது அவரின் ஆட்சிகாலத்தில் நடந்தது.
ஒரு பொருளின் விலையில் 10 மடங்காக வைத்துதான் கணக்கு காண்பிப்பார்கள். இதற்கு எதிர்கட்சியாக இருந்த போதே எதிர்ப்பு தெரிவித்தோம். அதாவது அவரின் ஆட்சியில் ரூ.2,800 விளம்பர பேனருக்கு அவர்கள் போட்ட தொகை ரூ28,000. இப்படி ஓவ்வொரு பொருளுக்கும் 10 மடங்கு விலை போட்டவர்கள் தான் இன்று போலியான குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்கள். அவர் அளித்த செய்திகள் யாரோ ஒருவர் கொடுத்த தகவலினால் தான் தெரிவித்திருக்கிறார். தகவல் கொடுத்தவரிடம் எடப்பாடி சற்று எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.