இந்திய அணி என்று போகும்போது, ரஞ்சிக்கோப்பை வெற்றியாளர்கள் போன்றவர்களைத்தான் எதிர்பார்ப்பார்கள். இம்முறை தமிழக வீரர்கள் நல்ல முறையில் விளையாடி காட்டுவார்கள் என நம்பிக்கை இருக்கிறது. கிரிக்கெட்டில் அரசியல் கட்டாயம் கிடையவே கிடையாது. நீங்கள் அரசியல்வாதி யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள். இதில் அரசியல்வாதிகள் யாராவது பரிந்துரை செய்தாலும் கூட, உள்ளே வர முடியாது.
அப்படியே ஓரிருவர் இருந்தாலும் கூட, அவர்களின் திறமையால் தான் நீடித்திருக்க முடியுமே தவிர, இல்லையெனில் முடியாது. அப்படி டெண்டுல்கர் நினைத்திருந்தால் அவருடைய மகனை அணிக்குள் கொண்டு வந்திருக்க முடியுமில்லையா..! எனவே, திறமை இருந்தால்தான் இதில் சாதிக்க முடியுமே தவிர, திறமை இல்லையெனில் மிகவும் கஷ்டம்தான்” என்றார்.