சென்னை: திருமழிசை புதுநகர் திட்டத்தில் செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 17 கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு திருமழிசையில் துணைக்கோள் நகரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது. இதில் 12,000 அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனை, பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றன. மேலும், நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முனையம் அமைக்கப்படவுள்ளது.