Loading

அகமதாபாத்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் பாஜக பிரமுகர்கள் 12 பேர் அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.

குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் 2 கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு கட்ட தேர்தலுக்கான மனு தாக்கல், பரிசீலனை, மனு திரும்பப் பெறுதல் ஆகியவை முடிந்துள்ளன. முதல்கட்ட தேர்தலுக்கு இன்னும் 1 வாரமே உள்ளது.

6 முறை எம்எல்ஏ: இந்நிலையில் டிச.5-ம் தேதி நடைபெறும் 2-ம் கட்ட தேர்தலில்பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடும் 12 பேர், கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக மாநில பாஜக தலைவர் சி.ஆர்.பாட்டீல் நேற்று அறிவித்தார். இவர்களில் 6 முறை எம்எல்ஏவாக இருந்த மது ஸ்ரீவத்சவ் மற்றும் 2 முன்னாள் எம்எல்ஏக்களும் அடங்குவர்.

இரண்டாம் கட்ட தேர்தலில் வேட்பு மனுக்களை வாபஸ் பெற நவம்பர் 21 கடைசி நாளாகும். எனினும் இவர்கள் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெறாததால் இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிச. 1-ம் தேதி நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் 7 பாஜகவினரை அக்கட்சி கடந்த சில நாட்களுக்கு முன் சஸ்பெண்ட் செய்திருந்தது. இந்நிலையில் தற்போது மேலும் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *