உலக கோப்பை தொடர் முடிந்த கையோடு, இன்னொரு ‘டி–20’ தொடர் ஆரம்பமாகிறது. இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் போட்டி இன்று நடக்கிறது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் இளம் இந்திய படை சாதிக்க காத்திருக்கிறது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, முதல் கட்டமாக மூன்று ‘டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி இன்று வெலிங்டனில் நடக்கிறது.