`தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை, ஆளுநரைக் குறை கூறும் அரசாக தி.மு.க இருக்கிறது’ என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருப்பது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், “அவர் எல்லாம் சொல்லுவார். துப்பாக்கிச்சூட்டையே டி.வி-யில் பார்த்துத் தெரிந்துகொண்டேன் என்று சொன்னவர் அவர். அவர் ஆளுநரைப் பார்க்கப் போனதே இதற்கு அல்ல. அவங்க கட்சிக்குள்ள அடிச்சிக்கிறாங்களே அதை எப்படியாவது ஆளுநரிடம் சொல்லி, உள்துறை அமைச்சரிடம் கூறி சரிபண்ண முடியுமா என்பதற்காகத்தான் போனாரே தவிர, இதெல்லாம் சும்மா…
அரசியல் பேசணுமே என்பதற்காகப் பேசினாரே தவிர, வேறேதும் கிடையாது. அவங்க ஆளுநரைப் பார்க்கப் போன காரணம் வேற, வெளியில வந்து பேட்டி கொடுத்தது வேற” என்றார்.