சிவகார்த்திகேயன் இப்போது `மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன் அவர் நடிப்பில் வெளியான `டாக்டர்’, `டான்’, `பிரின்ஸ்’ படங்களுக்கு முன்பே கமிட் ஆன படம் `அயலான்’.

`நேற்று இன்று நாளை’ ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத்சிங், இஷா கோபிகர், பானுப்பிரியா, பால சரவணன் கூட்டணியில் ‘அயலான்’ ஆரம்பமானது. இடையே கொரோனா காலகட்டத்தினால் படப்பிடிப்பு பாதித்தது. தயாரிப்பாளர் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் ராஜேஷின் முயற்சியால் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பித்தது. சென்ற ஜனவரி மாத தொடக்கத்திலேயே அதன் படப்பிடிப்பு நிறைவுற்றது என்றார்கள்.

அஜித்- சிவா சந்திப்பு

`அயலான்’ சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் அமைந்த கதை. வேற்றுகிரகவாசிகள் குறித்தும் திரைக்கதையில் வரும். எனவே படத்தில் கிராஃபிக்ஸ் வேலைகள் அதிகம் இருக்கிறது என்பதால் இந்தாண்டு டிசம்பரில் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர் என்றும் சொல்லப்பட்டது. அதன்பின்னர் மீண்டும் ஃபைனான்ஸ் சிக்கல்களால் கிராஃபிக்ஸ் வேலைகள் நடக்காமல் போனது. ஹீரோவின் முயற்சியினால் சிக்கல்கள் தீர்க்கப்பட்டுள்ளதால் இப்போது அதி நவீன கிராஃபிக்ஸ் வேலைகளுடன், அப்டேட் வெர்ஷனாக மீண்டும் படப்பிடிப்பை ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து விசாரித்தோம்.

சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் ‘அயலான்’ படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. ப்ளூமேட் பின்னணியில் காட்சிகளைப் படமாக்கி வருகிறார்கள். படத்தை கோடை கொண்டாட்டமாக கொண்டு வரவிருக்கிறார்கள். இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பிற்கு பின், சிவா மீண்டும் ‘மாவீரன்’ படப்பிடிப்பில் பங்கேற்பார் என்கிறார்கள்.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *