தமிழகம் முழுவதும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நாளை (நவம்பர் 25ஆம் தேதி) நடைபெற உள்ளன. சென்னையில் கிண்டி, ஆலந்தூர்‌ சாலையில்‌ உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

தமிழ்‌நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌ நெறி வழிகாட்டும்‌ மையங்களிலும்‌, இரண்டாவது மற்றும்‌ நான்காவது வெள்ளிக் கிழமைகளில்‌ தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள்‌ நடத்தப்படுகிறது. அவ்வாறு நடத்தப்பட்டு, வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு தனியார்‌ துறையில்‌ வேலை வாய்ப்புகள்‌ பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன்‌ மூலம்‌ இளைஞர்கள்‌ அதிக அளவில்‌ தனியார்‌
துறையில்‌ பணி நியமனம்‌ பெற்று வருகின்றனர்‌.

சென்னையில்‌ உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில் நெறி வழிகாட்டும்‌ மையங்களும்‌ இணைந்து நாளை 25.11.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார்‌ துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.

இந்த வேலைவாய்ப்பு முகாம்‌ சென்னை – 32, கிண்டி , ஆலந்தூர்‌ சாலையில்‌ உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில்‌ உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ காலை 10.00 மணி முதல்‌ மதியம்‌ 2.00 மணி வரை நடைபெற உள்ளது.

News Reels

இம்முகாமில்‌ 8- ஆம்‌ வகுப்பு, 10- ஆம்‌ வகுப்பு, 12- ஆம்‌ வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளமோ, கலை, அறிவியல்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்பப் பிரிவில்‌ ஏதாவது ஒரு பட்டம்‌ (டிகிரி) ஆகிய கல்வித் தகுதியை உடைய அனைவரும்‌ கலந்து கொள்ளலாம்‌. இந்த முகாமில்‌ 20-க்கும்‌ மேற்பட்ட தனியார்‌ துறை நிறுவனங்கள்‌ கலந்து கொண்டு, பணிக் காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்‌. 

இம்முகாம்‌ வாயிலாக பணி நியமனம்‌ பெறும்‌ இளைஞர்களின்‌ வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. வேலை அளிக்கும்‌ நிறுவனங்களும்‌, வேலை தேடும்‌ இளைஞர்களும்‌ இந்த முகாமில்‌ கலந்து கொள்ள எந்தவித கட்டணமும்‌ செலுத்த தேவை இல்லை.

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்‌ இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்‌ கொள்ளுமாறு வேலைவாய்ப்பு மற்றும்‌ பயிற்சித்துறை இயக்குநர்‌ கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்‌.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *