இதனால், டெண்டர் விதிகளின்படி விநியோகம் செய்த பாக்ஸ்களுக்கு வட்டியுடன் பணம் தர வேண்டும். அத்துடன் பராமரிப்புக்கான செலவையும் சேர்த்து 200 கோடி ரூபாய்யை உரிய தேதிக்குள் தருவதாக உறுதி அளிக்க வேண்டும் என்று நிறுவனத்தின் சார்பில் அரசு உயர் அதிகாரிகளுக்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு உறுதி அளிக்காமல் மந்த்ரா நிறுவனம் சேவைகளை வழங்குவதில் காலதாமதமாக செய்வதாக கூறி 56 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கிடையே செட்டாப் பாக்ஸ்களை கொள்முதல் செய்ய ராஜன் வங்கியில் வாங்கிய கடனை செலுத்தாததால், மும்பையில் உள்ள அவரது வீட்டில் வங்கி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிவிட்டனர். ஏற்கனவே, பணம் எதுவும் பெறாமல் 2 ஆண்டுகளாக பராமரிப்பு செய்து வந்துள்ளது.

அரசு கேபிள் டி.வி

அரசு கேபிள் டி.வி

இதனால், ஆத்திரத்தில் தனது கட்டுப்பாட்டில் உள்ள 21 லட்சம் செட்டாப் பாக்ஸ்களுக்கான சேவையை ராஜன் நிறுத்தி இருக்கிறார்” என்றனர் விரிவாக…

இதனிடையே, தமிழக அரசு கேபிள் டிவி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவின் கீழ் ராஜன் மீது வழக்கு பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், அவரை கைது செய்தனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் தலையீட்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு 90 நாளில் உரிய பணத்தை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 900-க்கும் அதிகமான உள்ளூர் சேனல்கள் இருக்கின்றன. இவற்றை ஒளிபரப்ப மாதம் 10 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதன்படி ஆண்டுக்கு சுமார் 200 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. அதேபோல, கேபிள் இணைப்புக்கு 70 முதல் 100 ரூபாய் வரை கட்டணம் செய்யப்படுகிறது.

Source link

By Admin S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: